23/03/2019

தீராதிரு நினைவே (பாடல்)


தீராதிரு நினைவேத் தீராதிரு- ஞானத்
தீயாயிரு நினைவேத் தீயாயிரு!

யாரென்ன சொன்னாலும் குற்றம் இல்லை
யாரிங்கே போனாலும் நட்டம் இல்லை
ஞாலத்தின் பார்வைக்கு எங்கே எல்லை?!
ஞானத்தின் பார்வைக்கு அன்பே எல்லை!

வாடாதிரு மனமே வாடாதிரு- நீ
கூடாதிரு சினமே கூடாதிரு!

நிர்வாண நிஜமாக மண்ணில் வந்தோம்
நிஜமான நிர்வாணம் எங்கே கண்டோம்?!
கண்மூடிக் கனவாகக் கண்ணில் கண்டோம்
கண்மூடும் முன்னாலே எங்கே சென்றோம்?

✍️செ. இராசா

தலைப்பு: திரு. மோகனன் அவர்கள்

No comments: