22/03/2019

#கண்ணன்_என்_மன்னன்




இசையோடு இசையாக
இசை(க்)கின்ற போதே-இவன்
இடையாட்டி இடையாட்டி
இடரோட்டும் இடையன்!

குயிலோடு குயிலாக
குழலூதிக் கொண்டே-இவன்
நகையோடு உறவாடி
பகையோட்டும் மன்னன்!

கவியோடு கவியாக
கவிபாடிக் கொண்டே-இவன்
குடைநீட்டி குணங்காட்டி
குடிகாக்கும் கண்ணன்!

#கண்ணன்_என்_மன்னன்

No comments: