22/04/2017

குரு வணக்கம்



அருள்பசியால் இரை(ற)தேடி
அலைந்தேதான் திரிந்தேனே!
அருள்மழையே பொழிந்தாலும்
அடியேன்நான் நனையலையே!

வந்தவழி தெரியாமல்
விழிபிதுங்கி நின்னேனே!
போனயிடம் அத்தனையும்
பாவிப்பசி தீரலையே!

முக்திவழி காட்டிடவே
முத்து ஐயா வந்தாரே!
அருட்தந்தை கருத்துக்களை
அமுதம்போல தந்தாரே!

எம்குருவின் ஆசியாலே
என்பிணிகள் ஓடியதே!
அகத்தவத்தின் அற்புதத்தால்
அருள்பசியும் அடங்கியதே!

ஆதியையாம் அடைந்திடவே
ஆனதவம் சொன்னாரே!
விழிப்புநிலை சாவியாலே
விதிப்பூட்டைத் திறந்தாரே!

துயர்துடைத்த எம்குருவை
துரியத்திலே வாழ்த்துகிறேன்!
மனமாலே மொழியாலே
மகிழ்ந்ததேநான் வணங்குகிறேன்!

வாழ்க வளமுடன் ஐயா
வாழ்க வளமுடன் ஐயா

18/04/2017

வள்ளுவம் போற்றுவோம்







அறத்தை உயிராய்க் காத்து
பொருளை உடலுக்காய் சேர்த்து
இன்பத்தை மனதினில் கொள்வோம்

கடவுளைப் பாயிரம் பாடி
இல்லறம் நல்லறம் செய்து
துறவறம் பொதுநலம் பயில்வோம்

மூன்று பால்களும் பயின்றால்
நான்காம் பாலாம் வீட்டை
ஐங்கரன் அருளால் பெறலாம்

ஊழ்வினை ஆற்றும் செயலால்
உயர்வும் தாழ்வும் வரலாம்
உண்மை தவறிட வேண்டாம்

நட்பியல் அறிந்தோர் வாழ்வில்
நாளும் இன்பம் அடைவார்
நட்பால் உயர்வைப் பெறுவார்

கர்மம் செய்திடும் முன்னே
காலம் கணித்திட வேண்டும்
கடமை ஆற்றிட வேண்டும்

அரசர் அமைச்சர் எல்லாம்
அறத்தை அரணாய் காக்க
அளித்த குறள்கள் பயில்வீர்

கல்லாமை இருளை அகற்றி
கல்வியை அறிவாய் மாற்றி
அன்பை அருளாய் ஆக்குவோம்

ஊடல் கூடல் காமம்
ஊறுகள் களைத்திடும் பாடம்
உயர்மறை திருக்குறள் ஒதும்

குறளால் தமிழுக்குப் பெருமை
தமிழால் தமிழர்க்குப் பெருமை
தமிழரால் தரணிக்கேப் பெருமை

வாழ்க தமிழ்!
வாழ்க குறள்!
வாழ்க வள்ளுவன்!

மகளே செல்ல மலரே




மகளே செல்ல மலரே!
மாரில் தவழும் மயிலே!
மழலை கொஞ்சம் மொழியால்
மனதில் மின்னும் நிலவே!

வித்தில் விளைந்த முத்தே!
விருப்பில் பிறந்த சொத்தே!
விவேகம் கலந்த குறும்பால்
விடியல் கொள்ளுது மனமே!

கவிதா கருவழி உறவே!
கடவுள் அருள்வழி வரவே!
கதைக்கும் அழகைக் கண்டால்
களிப்பில் கவிதை வருதே!

தங்கை இல்லா நிலையே!
தந்தது எம்முள் குறையே!
தங்கை மகளாய் வந்ததால்
தந்தையும் தமையனும் ஒன்றே!

அப்பா என்ற சொல்லே!
அனுதினம் அமுதைத் தருதே!
அணுவின் ஒலியைக் கேட்டால்
அகிலமே மறந்து விடுமே!