19/03/2019

இன்னும் #மனித_நேயம் மலரலையே...

மெதுவாய்ப் பேசினால் மிதவாதி!
வேகமாய்ப் பேசினால் தீவிரவாதி!
மதத்தைப் பேசினால் மதவாதி!
மறுத்து பேசினால் குழப்பவாதி!

இல்லை என்றால் நாத்திகவாதி!
இருக்கு என்றால் ஆத்திகவாதி!
இரண்டு என்றால் த்வைதவாதி
ஒன்றே என்றால் அத்வைதவாதி!

அளந்து பேசினால் சிந்தனைவாதி!
அள்ளி விட்டால் அரசியல்வாதி!
பழமை பேசினால் இலக்கியவாதி!
புதுமை பேசினால் புரட்சிவாதி!

தன்னலம் பேசினால் சுயநலவாதி!
தன்னினம் பேசினால் பிரிவினைவாதி!
உள்ளதைப் பேசினால் சத்யவாதி!
உரிமையைப் பேசினால் கம்யூனிசவாதி!

இத்தனை வாதிகள் மத்தியிலும்
இங்கே மனிதவாதிகள் தோன்றலையோ?

இன்னும் #மனித_நேயம் மலரலையே...
***********************************************
தலைப்பு: Ganesh Kannan நண்பர், திருச்சி பட்டிமன்ற நடுவர் மற்றும் இசைப்பள்ளி பேராசிரியர்

No comments: