20/03/2019

விதியென்று சொல்லலாமா?!!



தூவுகின்ற வித்தெல்லாம்
துளிர்விட்டு எழுவதில்லை

விழுகின்ற விதையெல்லாம்
விருட்சமாய் வருவதில்லை

மழைமேக நீரெல்லாம்
முத்தாய்ப் பிறப்பதில்லை

படைக்கின்ற படைப்பெல்லாம்
படியேற முடிவதில்லை

வீரியங்கள் மிகுந்தாலும்
விரையமாய்ப் போவதை
விதியென்று சொல்லலாமா?!!

No comments: