22/03/2019

நக்கீரர் ---.இது அரசியல் பதிவே...


(தம்பி Ramesh Devar கொடுத்த சூழ்நிலையை உள்வாங்கி படைத்த படைப்பு...இது அரசியல் பதிவே...)

சிவன் (புலவர் வடிவில்)
********************
கொற்றவன் கொடுக்கிற
பொற்கிழிப் பையினை
தட்டித் தடுக்கிற
தற்குறி யாரிங்கே?

கற்றவன் மூளையைக்
கற்பனை என்றே
நக்கலாய்ப் பேசிய
நக்கீரன் யாரிங்கே?!

பாண்டிய மன்னன்
*****************
எந்தமிழ் நாட்டின்
செந்தமிழ்ப் பேரவை
எந்தமிழ் அன்னையின்
சங்கத் தலைவனை
ஒருமையில் பேசுதல்
பெருமை இல்லை...
பொறுமை தேவனே..
பொறுமை பொறுமை

நக்கீரர்
*******
தருமியின் திட்டம்
தவறுள்ள திட்டம்
உட்பொருள் பிழைகளை
உரைக்கிறேன் கேளும்..

வைகை அணையின்
வளத்தைக் காக்க
தெர்மாக் கோலில்
தீட்டிய திட்டம்
முற்றும் தவறென
முழங்கிச் சொன்னேன்!

குனிந்தோர் இங்கே
குறைவின்றி இருக்க
குனிந்து வணங்கும்
கூவத்தூர் திட்டம்
கொடுஞ் செயலென்றே
கோடிட்டு சொன்னேன்!

கோடிக் கணக்கில்
கேடியாய் அடிக்கும்
அப்பல்லோ இட்லியை
தப்பெனச் சொன்னேன்!

கொட்டத்தை அடக்க
கோட்டைக்கு சென்றோன்
சட்டையைக் கிழிக்கும்
சண்டியர் திட்டத்தை
ஆக...ஆக......
அதையும் சொன்னேன்!

எல்லாக் காசும்
செல்லாப் போக
ஒரே நாளில்
உருவும் திட்டத்தை
அதையும் தானே
அழுத்திச் சொன்னேன்!

அவனும் இவனும்
இவனும் அவனும்
மாறி மாறியே அடிக்கிற திட்டம்
மாற்றிட நானும்
வேகமாய்ச் சொன்னேன்!

இத்தனை ஓட்டைகள்
இருக்கிற திட்டத்தை
எப்படிச் சரியென
எவரிங்கே சொல்வார்?!!

(சிவனின் நெற்றிக்கண் திறக்கிறது)

ஊடகக்கண்ணால்
ஊரை எரித்தாலும்
சினிமாக் கண்ணால்
சீரழிவு தந்தாலும்
ஆயிரம் முறைநான்
அடித்துச் சொல்வேன்

நெற்றிக் கண் திறப்பினும்
குற்றம் குற்றமே...

முடிவு
******
முகநூலில் விருப்போடு
அகநூலில் சிரிப்போடு
கனவு கலைகிறது.....
நினைவைச் சுமந்தபடி..

No comments: