03/03/2019

பிறந்தநாள் வாழ்த்துகள்-கவிஞர் முத்துச்சாமி அப்பா



த்தான தமிழுக்குள்
முத்தான சொல்கண்டு
எப்போதும் தப்பாமல்
வித்தான கவிதந்து
முகநூலில் அல்லாமல்
அகநூலில் ஆள்கின்ற
“கவிக்கடல்” அப்பாவை
கவித்துளி வணங்குகின்றேன்!

நான் எனும் மண்குடத்தை
நான் ஈன்ற அந்நாளில்
கரங்களில் ஏந்திக் தந்த
கவியப்பா கால்களிலே
சின்னக் கண்ணதாசர்
சிரம் தாழ்த்தி வணங்கியதை
சிறியோன் யான் கண்டபோது
சிலிர்த்தேதான் போய்விட்டேன்!

தமிழே வந்திருந்து
தமிழை வணங்கியதை
அப்போது நானும்தான்
அறியாமல் இருந்திருந்தேன்!
அறியாமை பிழைபொறுத்த
அப்பாவின் கால்களில்
அகவைத் திருநாளில்
அகமகிழப் பணிகின்றேன்!

அகமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா

No comments: