28/03/2019

ஐரா


“மேகதூதம் பாடவேண்டும்
மேனி மீது சாரல் வேண்டும்
காளிதாசன் காண வேண்டும்
வானவில் வரும் வாழ்வில் மீண்டும்”

என்ற தாமரையின் பாடல் வரிகளுக்காக நான் போன படம் இது. சமீப காலங்களில் நயன்தாரா நன்றாக படங்களைத் தேர்வு செய்து நடிக்கிறார் என்பதும் மறுக்க முடியாத உண்மையே. அதனாலேயும் இந்த படம் பார்க்க போனேன் என்று உண்மையைச் சொல்லலாம்தான். இருந்தாலும் நாமலும் பாடல் எழுதுகிறோம்னு வேறு எப்படி காண்பிப்பது?!!... சரி விடுங்க. படத்துக்குள்ள போவோம்.

ஆரம்பத்தில் மிக வேகமாகப் போனாலும் இடை இடையே மெதுவாகப் போனது சற்று சலிப்பு தந்தது. ஆனால், இந்தப்படத்தின் சொல்ல வந்த கருத்துக்கு அந்த மெதுவான நகர்வு தேவையே. இராசியில்லாத பெண் என்று சில கசப்பான சம்பவங்களை வைத்து ஒரு பெண்ணை இந்த சமூகம் சாடும்போதும் அவள் எப்படி பாதிக்கப்படுகிறாள் என்பதை மையமாக வைத்து பிண்ணப்பட்ட கதை. இரண்டு நயன்தாராக்கள் இந்தப் படத்தில் உண்டு.

இதில் நயன்தாரா நடிப்பில் பிண்ணி எடுத்துள்ளார். அதிலும் அந்த கருப்பு நயன்தாரா...அற்புதம் போங்க. நானும் கருப்பாய்ப் பிறந்துவிட்டோமே என்று ஆரம்ப காலங்களில் வருத்தப்பட்டது உண்டு. அப்படி ஆக்கிருவாங்க நம்மல. அந்த கருப்பு நயன்தாராவும், சிறுவயது பாத்திரத்தில் வந்த அந்த டிக்டாக் புகழ் சகோதரியும் கலக்கி உள்ளார்கள்.

யோகிபாபு காமெடி பரவாயில்லை ரகம்.
பிண்ணனி இசை மற்றும் பாடல்கள் அருமை. அப்புறம் முக்கியமான விசயம்: நம்ம ஊதாச்சட்டையும் இருக்கிறார். படத்திலும் யூடியூப் வழியாகவே வருகிறார். செம்ம...போங்க

சின்னக் கதையை சின்னத் திரைக்கதையாகவே எடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இருப்பினும் படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

அந்த கருப்பு நயன்தாராவின் நடிப்பிற்காக
என் மதிப்பெண்: 3.75/5

No comments: