26/03/2019

#கடவுள்_என்னும்_பலூன்_காரனே



காற்றை சிறைபிடித்து
கயிற்றிலே கட்டிவிட்டு
கயிற்றின் மறு நுனியை
கையோடு வைத்தவனே!

உயரத்தில் பறப்பதுபோல்
உருவத்தை வடிவமைத்து
ஒவ்வொரு நிறத்தையுமே
உலவவிட்டு ரசிப்பவனே!

வெளியே இருப்பதையே
உள்ளே அடைத்துவிட்டு
ஊதிய காற்றிற்கு
ஊதியங்கள் கேட்பவனே!

மேனியில் ஓட்டையெனில்
மூச்சை வெளியேற்றி
சூக்கும உடலுக்கு
சுதந்திரம் அளிப்பவனே!

கிழிந்த தேகத்தைக்
குப்பையிலே எரிந்துவிட்டு
புதிய உடலுக்குள்
புது மூச்சு தருபவனே..!!!

நீ பெரிய விற்பனனே....!!!

#கடவுள்_என்னும்_பலூன்_கார
னே

No comments: