13/03/2019

#கற்றது_கையளவு_3


முகநூலில் எழுதுகின்ற நிறையபேர் சொல்வார்கள். நான் என் மன திருப்திக்காகத்தான் எழுதுகின்றேன், எனக்கு likes, comments எல்லாம் முக்கியமில்லை என்று. எனக்கென்னவோ இந்தக் கூற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம், யாருமே நம் பதிவை பார்க்க அவசியம் இல்லையெனில் நாம் வீட்டில் ஏதாவது ஒரு காகிதத்தில் அல்லவா எழுதி வைத்திருக்க வேண்டும். மேலும், like என்பது விருப்பக்குறியீடாக மட்டும் பார்க்கத் தேவையில்லை, நம் பதிவை இத்தனை பேர் பார்த்திருக்கிறார்களே என்ற ஒரு வருகை பதிவேட்டு கணக்காகவும் எடுத்துக் கொள்ளலாம்.


இங்கே தங்கள் பதிவுகள் அனைவரையும் சென்றடைகிறதா இல்லையா எனத் தெரியாமலே பலரும் விரக்தி அடைவதைக் காண்கின்றோம். சிலபல எரிச்சல் ஊட்டும் பதிவுகளையும் காண்கிறோம். முகநூலில் பயணிக்கும் நாம் முகநூல் பற்றி முழுமையாகத் தெரிந்திருக்கிறோமா என்றால் இல்லையென்றே நினைக்கிறேன்.

எனக்குத் தெரிந்த சில விடயங்களைப் சுருக்கமாகப் பகிர நினைக்கின்றேன். உங்களுக்கு உதவுமெனில் எனக்கும் மகிழ்ச்சியே.

1. நல்ல பதிவுகளை வாழ்த்த நினைக்கிறோம். ஆனால் வாழ்த்தியபிறகு மற்றவர்கள் போடும் comments ஆல் நமக்கு ஒரே notifications தொந்தரவாக இருப்பதால் பலரும் பின்னூட்டம் கொடுக்கவே யோசிப்பது உண்டு. நல்ல பதிவை வாழ்த்தவும் வேண்டும் அதே சமயத்தில் தொந்தரவும் கூடாது, என்ன செய்வது? இதோ தீர்வு: அந்தப் பதிவின் மூலையில் வைத்து click செய்தால் “Turn off notifications for this post” என்று வரும். அதைத் தொட்டால் போதும். பிறகு தொந்தரவு இல்லை.

2. ஒரு சிலரின் பதிவுகள் மிகவும் எரிச்சலடைய வைக்கிறது. ஆனால் அவர் நட்பில் வேண்டும் இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள் அவ்வளவு தானே?! இதோ தீர்வு: அவருடைய ஏதாவது ஒரு பதிவில், அப்பதிவு வந்த இடத்தின் மூலையில் “Snooze” என்பதை எவ்வளவு காலம் வேண்டுமோ அந்த அடிப்படையில் click செய்யுங்கள். Follow off ம் செய்யலாம்.

3. அதிகத் தொந்தரவு எனில் “unfriend” செய்யுங்கள். அந்த நபர் உங்கள் பதிவைத் திருடுபவரா “Block” செய்துவிடுங்கள். வேறு வழியே இல்லை.

4. அடிக்கடி பலரும் தங்கள் படத்தைப்போட்டு எழுதுவார்கள். ஏன் தெரியுமா?! தங்கள் படங்களை முகநூல் நன்றாக அறியும் (முகப்பில் இருந்து எடுத்துக்கொள்ளும்) அதிக நபர்களுக்கு அப்பதிவுகள் போய்ச்சேரும். அதற்காக அடிக்கடி போட்டாலும் எரிச்சலே அடைய வைக்கும்.😊😊😊(நீங்க மட்டும் என்னவாம்...?!! சரி சரி ...விடுங்க)

5. Share பதிவுகள் அதிகமாகப் போகாது.

6. மற்ற யூடியூப் (இதை ஆங்கிலத்தில் எழுதாதற்கும் காரணம் உண்டு) share களும் அதிகமாகப் போகாது. ஆனால், முகநூல் காணொளிகள் போகும்.

7. Status மாதிரி இரண்டு மூன்று வரிகளில் எழுதுவது பார்வைக்கு போகும்.

8. மேலும், நீங்கள் யாரை அடிக்கடி பார்க்கின்றீர்களோ, like செய்கிறீர்களோ, அவர்களுக்கேப் பதிவுகள் அதிகமாகப் பார்வையில்படும். (இனிமேல் ச்சும்மா திட்டாதீங்கப்பா)

9. உங்களை யாராவது tag செய்தால் ஒன்று நீக்கலாம் இல்லையேல் தங்கள் Time lineல் அந்தப் பதிவை Hide செய்யலாம்.

இது சில தகவல்கள் மட்டுமே... அனைத்துமே இப்போது வியாபார நோக்கில் செயல்படுகிறது உறவுகளே. அதை அடுத்த பதிவில் தருகின்றேன்.

ஆகவே, அன்பார்ந்த மக்களே.. முகநூல் என்கிற மாயையின் பிம்பத்தைப் புரிந்து அதைப் பயனுள்ள முறையில் கையால்வோம் என்று நன்றி கூறி விடைபெறுகின்றேன் நன்றி.

(முகநூலும் தன் முகத்தை மாற்றிக்கொண்டேதான் இருக்கிறான். நாமும் மாறத்தான் வேண்டும். இல்லையேல் மாரத்தானில் காணாமல் போவோம்.

மாற்றம் ஒன்றே மாறாதது)

✍️செ. இராசா

No comments: