30/08/2009

நன்றி இறைவா!

நன்றி  இறைவா!


கடவுளே! நான் பெற்ற ஓரு தோல்வி
பல வெற்றிகளை மறக்கச் செய்து விட்டதே!
என்ன ஓர் மாயை?
ஆம்
பால்ய பருவ ஆசைகளையும்
விடலை பருவ விருப்பங்களையும்
விறு  விறு  என அல்லாமல்
சீராக வழங்கியவன் நீ.


பத்தாம் வகுப்பில் ஆனேன்
முதல் மாணவன்
எட்டாம் வகுப்பில் மொத்தம் நூறை
எட்டாத மாணவன்
எப்படி மாறினேன்?!
சராசரி மாணவன்
சாதனை மாணவனானேன்,எப்படி?


பனிரென்டாம் வகுப்புதனில்
பத்திரமாய் படிக்கையிலே
பருவத்தின் மாறுதலினால்
பாழ் குழியில் வீழாமல்
பக்குவமாய் பாதுகாத்து
படிப்படியாய் அடுத்த படி
எடுத்து வைத்தேன்
எப்படி அது எப்படி?


கல்லூரி வாழ்க்கையிலே
எத்தனையோ காட்சிகள்.
கண்மூடி கண்திறந்தால்
நித்தம் வரும் காவியங்கள்
கற்பனையாய் போகுமெனத் தெரியாது
காளையாய் துள்ளித் துரிந்த போதிலும்
கால் இடரி விழவில்லை
கண்ணியமாய் எடுத்து வைத்தேன் அடுத்த படி
எப்படி அது எப்படி?


முதல் வேலை...
முதல் சம்பளம்...
வாங்கினேன்..இல்லை ..இல்லை
தந்தையினால் வாங்கப் பெற்றேன்.
அறிவின் தேடலும் ஆர்வக் கோளாறும்
சென்னையின் தூரத்தை துரத்தியது 
வாங்கிய சம்பள்ம்
உணவுக்கும் உறைவிடத்திற்கும் போதாத காலத்திலும்
உண்டாக்கியவருக்கு அனுப்பினேன்
அன்போடு வெறும் ஐனூறு ரூபாய்
பெற்றவர்கள் அதை எப்படி
பெற்றார்கள் எனத் தெரியாது
நான் அனுப்பியது ஏனோ?
என்றும் அனுப்பும் எண்ணம்
என்னுள்  நிரந்தரமாய் இருக்க நினைத்ததால்




தந்தையின் சோகராகத்தை
உண்மையில் உணர்ந்ததால்
உழைத்தேன்! உருகினேன்.
உண்டாக்கியவருக்கு
ஊதியம் நிறைய அனுப்ப
உற்றவனிடம் உண்மையில் வேண்டினேன்
அவனோ அனுப்பிய இடம்
அஸ்ஸாம்.


அஸ்ஸாம்
அருகில் ஒன்றும் இல்லை
ஆர்வமிகுதியாலும்
அப்பாவின் அதிக ஆசையினாலும்
அனுப்பி வைக்கப்பட்டேன்
அப்படியே அனுப்பினேன்
அத்தனை ஊதியத்தையும்
மறுபடியும் ஆசை ஊற்றெடுக்க
அனுப்பி வைக்கப்பட்டேன்
அடுத்த இடம் கத்தார்.


வாழ்வின் முதல் தோல்வி கண்ட இடம்
மூன்று மாதங்கள் எத்தனை எத்தனை
சோதனைகள்
ஏமாற்றப்பட்டேன் இல்லை
ஏமாந்துபோனேன்!
உண்ண உணவுக்கும் கஷ்டம்
என்னால் பிறருக்கும் கஷ்டம்
வேலை உண்டாம் விசா இல்லையாம்
விசா உண்டாம் வேலை இல்லையாம்
வேண்டாம் இந்த நாடு
செல்வோம் நம் வீடு,என்று
இல்லம் நோக்கி அழைத்தால்
பெற்றவர் பேசினார் அன்பாக
செத்தாலும் சா! இங்கு வராதே
வந்தால் அசிங்கமாம்

சிங்கமாய் இருந்தவனை
சில்லரையாய் நினைத்தவர்
சிரிக்க மட்டுமல்ல
சிந்திக்கவும் மறந்து விட்டார்
நான் அவர் செல்ல மகனென்று

அதன் பின் மாறியது
அந்த  இனிய உலகம், இருண்ட உலகமாய்

தோலில் போட்டு வளர்த்தவள்
அத்தான் என்று கூறியவள்
சென்றாள் சீக்கிரம்
படைத்தவனை நோக்கி
அன்பானவளின் முதல் இழப்பு.

வாழ விரும்பாதவன் தேர்வு செய்வது
வெருப்புடன் மரணத்தை
தமக்காக போகும் மரணத்தில் சுயநலம் உண்டு
ஏனோ என்னுள் இல்லை அது?
பொது நலம் வேண்டவே
போனேன் .......அதே  அஸ்ஸாம்
அப்பொழுதும் அனுப்பினேன்
அனைத்து பணத்தையும்



விடுமுறைக்கு செல்ல மனமில்லை
பெற்றவர் ஒருவரல்லவே
மற்றவரை பார்க்க மனம் துடித்தது
தாயைச் சிறந்த கோயிலுமில்லை!
அத்தனையையும் அள்ளிக் கொடுத்தும்
அழுதழுது அனுப்பி வைத்தார்

ஆம்,அத்தனையையும் பிடுங்கி விட்டு
அநாதை போல

உணர்ந்தேன் ஒன்று !
வாழ்வில் வெற்றி பெற திறமை மட்டும் போதாது
சந்தர்ப்பமும் வாய்க்க வேண்டுமென்று.

வரவே வேண்டாமென்று எண்ணிய
அதே கத்தார் என்னை மீண்டும்
வருக வருக என வரவேற்றது ஏனோ?

புரிகிறது
இப்பொழுது

எத்தனை தோல்விகள் தந்தாலும்
அத்தனையும் இன்று இனிப்பதற்கு காரணம்
தோல்வியின் வலியல்லவா?

வாடகைப் பணியாளன்
நேரடி ஊழியன்
பொறுப்பு நிறை வேலையாள் என
மூன்று இடங்கள்

விசா இல்லை
விருந்தாய் இரண்டு புதிய நாடுகள் பார்வைக்கு
விழுந்த தருணங்கள்
வீணான நிமிடங்கள்
விழுப்புண் சுவடுகள்

புதியதோர் பயணம்
புதிராய் கிழம்பியவன்
புதியவளைத் தேர்ந்தெடுத்தேன்
புன்னியவதியாய் வந்தாள்
புத்துயிர் தந்தாள்

பூமியும் வாய்க்கப் பெற்றேன்.


புதல்வனோ? புதல்வியோ?
இல்லை இரண்டுமோ
அச்சாரமிட்டுவிட்டேன்
ஆயிரம் கனவுகள்
ஆயிரம் ஊடல்கள்
அது ஒரு அன்பான் பயணம்

இத்தனையும் வாய்க்கப் பெற்றும்
இன்னுமோர் ஆசையென
இன்னுமின்னும் எத்தனைதான் ஆசைகள்
வேண்டாம் போதும்
பெற்றவனே... போதும் உம் ஆசைகள்
எல்லாம்
அவன் செயல்
அவனின்றி அணுவுமில்லை
ஆசைகள் ஆயிரமெனில்
அடங்காது நம் ஆத்மா
ஆண்டவனை நேசிப்பாய்
அன்றே
அருட்மோட்சம்

நன்றி இறைவா!