27/03/2019

உடல் பொருள் ஆவியெல்லாம்


உடல் பொருள் ஆவியெல்லாம்
உனக்காகத்தானே...
உடன்படத் தயங்குவதேன்
ஓடி வா மானே...

வெண்ணிலவு நீ என்றால்
உன் பருதிநானே...
வெண்மையினை நீ பெறவே
உன்னை அடைவேனே

***பொறுமை***

உனைத் தொடும் வரைக்கும்தான்
உருகிடுவான் பெண்ணே...
உடை தொடும் முன்னாலே
ஓடி விடு கண்ணே...

கவிதையிலே கவுத்திடுவான்
கவனங்கொள் பெண்ணே
கழட்டிவிட முயன்றாலோ
கழட்டி அடி பெண்ணே- செருப்பைக்
கழட்டி அடி பெண்ணே!!!

✍️செ. இராசா

No comments: