28/03/2019

அடடா நான் என்னசொல்ல



அடடா நான் என்னசொல்ல
அடிநாக்கு ஊறுதே...
அடியேன் உனைக் கண்டாலே
அடிமனசு பொங்குதே..

உப்பிட்ட உன்னோடு
ஓடி மனம் வருகுதே..
புளிக்கின்ற உன்னையும்
புசித்திடவேத் தோனுதே...

அழகு அரைநெல்லியே
ஆசை மாங்காயே
இன்ப எலந்தைகளே
என்னோடு வாருங்களேன்!

✍️செ. இராசா

No comments: