புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
01/07/2025
ஏங்க டென்சன் எதுக்குங்க...
உழுதவன் கணக்கு பார்த்தா
பல்லவி
உழுதவன் கணக்கு பார்த்தா
உலக்கு கூட மிஞ்சல
உழைச்சவன் கணக்கு கேட்டா உனக்கு ஏனோ பிடிக்கல (2)
நீயும் வந்து நிலத்தில் நின்னு பாரு -----வந்தா
நீயே சொல்வ எங்க வரலாறு
ஊருக்கெல்லாம் சோறு போட்ட தாரு
இன்னும்
எங்க வாழ்க்கை மாறலையேன் கூறு
இந்த நிலைமை எப்போ மாறும்? கொஞ்சம் எங்கள நினைச்சுப் பாரும்
சரணம்_1
விளைய வைக்கும் மக்களத்தான் நினைச்சுப் பாத்தியா?
அலைய வைக்கும் பேர்களத்தான்
கேள்வி கேட்டியா?!
உழவரோட வாழ்க்கை இன்னும் உசரவே இல்லை
உழைக்கிறவன் முதுகு மட்டும் நிமிரவே இல்லை
வாலுபோயி கத்திவந்த கதையப்போல
மாறிமாறி வச்சுசெய்யும் வாழ்வே தொல்லை...
............
போனுலயே தட்டிதட்டிப் பொருள வாங்குறான்
லோனுலயே வட்டிகட்டி பெருமை பீத்துறான்
படத்தைக்கூடப் பார்க்காமலே கழுவி ஊத்துறான்
படத்தைமாத்தி படத்தைமாத்தி ஸ்டேடஸ் போடுறான்
போனுலயே நோண்டிநோண்டிப் பொருள வாங்குறான்
வானுலயே பறப்பதுபோல் கனவு காணுறான்
படத்தைக்கூடப் பார்க்காமலே கழுவி ஊத்துறான்
படத்தைமாத்தி படத்தைமாத்தி ஸ்டேடஸ் போடுறான்
கேப்பிலெல்லாம் கெடாவெட்டி சீனப் போடுறான்
ஆப்புலதான் எப்போதுமே பொருள வாங்குறான்
கேப்பிலதான் கெடாவெட்டி சீனப் போடுறான்
படத்தைக்கூடப் பார்க்காமலே கழுவி ஊத்துறான்
படத்தைமாத்தி படத்தைமாத்தி ஸ்டேடஸ் போடுறான்
விளைய வைக்கும் மக்களத்தான் நினைச்சுப் பாத்தியா?
அலைய வைக்கும் பேர்களத்தான்
கேள்வி கேட்டியா?!
உழவரோட வாழ்க்கை இன்னும் உசரவில்லீங்கோ..
உழைக்கிறவன் முதுகு மட்டும் நிமிரவில்லீங்கோ...
வாலுபோயி கத்திவந்த கதைதான் மச்சி...
16/06/2025
இக்கரைக் கக்கரை பச்சைதான்
இக்கரைக் கக்கரை பச்சைதான்- உன்
அக்கறைக் கெக்குறை உச்சந்தான்-வா
சுக்கிர திசையினி பக்கந்தான்- தா
சக்கரை யினிக்கிற முத்தந்தான்!செ. இராசா
நாக்கு நன்றாகச் சுழலும்படி எழுதிய சந்தம் (Tongue twisters) மக்களே....
14/06/2025
வாழ்வீர்பல்லாண்டு
மக்கள் பணியே
.....மகேசன் பணியென்னும்
அக்காலச் சொல்வழக்கின்
.....ஆழம்போல்- எக்கணமும்
மற்றோர் மகிழ்ந்திடவே
.....மாற்றிசையைத் தோற்றுவிக்கும்
அற்புதமே! வாழ்வீர்பல்
.....லாண்டு!!!
13/06/2025
மெட்டு: வானத்தைப் பாத்தேன்
நடந்ததை நினைச்சா
என்னத்தை சொல்ல...
எல்லாம் அவரவர் நேரமுங்க...(2)
இது எதனால் நடந்தது என்று
இங்கே எவருக்கும் புரியவில்லை
இறந்துபோன அத்தனைபேரும்
உண்மையிலே பாவங்க...
கருகிப்போன அத்தனை உசுரும்
கண்ணுமுன்னே வருதுங்க...
நடந்ததை நினைச்சா
என்னத்தை சொல்ல...
எல்லாம் அவரவர் நேரமுங்க...
பறந்திடும் முன்னே பார்க்கலையா?!
பழுதென முன்னேத் தெரியலையா?!
யாரைக் கேள்வி கேட்பது?
ஐயோ கடவுளே...
மனிதப் பிழைக்கிது தண்டனையா?
மனிதனாய்ப் பிழைப்பதே தண்டனையா?
ஒன்னும் புரிய வில்லையே... எல்லாம் தொல்லையே..
அட...வாழ் வென்பதே மாயை
இதை ஆழ் மனதிலே நீவை
அட...வாழ் வென்பதே மாயை
இதை ஆழ் மனதிலே நீவை
நடந்ததை நினைச்சா
என்னத்தை சொல்ல...
எல்லாம் அவரவர் நேரமுங்க...(2)
ஒரு நபர் குதித்து பிழைத்துவிட்டார்
பல பேர் உயிர்களைக் கொடுத்துவிட்டார்
விதியின் ஆட்டம் என்பதா
விளங்கவில்லையே
மருத்துவப் பிள்ளைகள் பாவமுங்க....
அவர்களின் நிலைமை கொடுமையுங்க..
என்ன சொல்லி என்னங்க எல்லாம் நேரங்க....
ஒரு நீர்க்குமிழிபோல் வாழ்க்கை
இதை ஆழ் மனதிலே நீவை (2)
நடந்ததை நினைச்சா
என்னத்தை சொல்ல...
எல்லாம் அவரவர் நேரமுங்க...(2)

12/06/2025
மகனேவுனை மகளேவுனை
05/06/2025
இடியாப்போம் இடியாப்போம்
#இடியாப்போம் இடியாப்போம்
பிடிபாப்போம் பிடிபாப்போம்(2)
இடியாப்போம் இடியாப்போம்
முடிஞ்சாநீ பிடிபாப்போம்...
இடியாப்போம் இடியாப்போம்
பிடிக்காம விடமாட்டோம்...
அப்படியா..
வாம்மா மின்னல்...
இடிமின்னலப்போல் ஏன்டா நீயும் ஓடுற
விடிகாலையில கண்ணாமூச்சி ஆடுற
இடியாப்பமுன்னு சோக்காத்தானே கூவுற
சரிபார்ப்பமுன்னு வந்தா சாலா தாவுற...
இடியாப்போம் இடியாப்போம்
பிடிபாப்போம் பிடிபாப்போம்(2)
சந்துல பொந்துல புகுந்து வாறான்
வந்ததக் காணலைப் பறந்து போறான்
எப்படி இப்படி கடந்து போனால்
எத்தனை விக்கிம் எதுக்கு வீணா?
கண்ணுல காட்டுற எண்ண மில்லைன்னா
வண்டில வச்சிட்டு வாறீயே எதுக்கு?
ஒன்னையும் விக்கிற ஆசை இல்லைன்னா
ஒன்டியாக் கூவுற ஓலம் எதுக்கு?!
பல்லில்லாத பெருசுகூட
பாலவூத்தத் துடிக்கும்
பொக்க வாயில் பாலவிட்டுப்
பாயாசமாக் குடிக்கும்
பச்சப்பள்ள அத்தனைக்கும்
இடியாப்பான்னா உசுறு
அச்சாநஹி ஐயம்சாரி
மத்ததெல்லாம்....நவுறு
கடலைக்கறி குருமாகூட
சேர்த்தா நல்லா இருக்கும்- அது
கிடைக்கலைன்னா என்னா இப்போ
வெல்லம் போட்டா ருசிக்கும்!
ஆயில் இல்லாப் பண்டந்தானே
ஆயுளக் கூட்டிக் கொடுக்கும்- அட
வறுத்து பொரிச்சு திண்ணோமுனா
வயசுதானே குறையும்!
இடியாப்போம் இடியாப்போம்
பிடிபாப்போம் பிடிபாப்போம்(2)
இடிமின்னலப்போல் ஏன்டா நீயும் ஓடுற
விடிகாலையில கண்ணாமூச்சி ஆடுற
இடியாப்பமுன்னு சோக்காத்தானே கூவுற
சரிபார்ப்பமுன்னு வந்தா சாலா தாவுற...
இடியாப்போம் இடியாப்போம்
முடிஞ்சாநீ பிடிபாப்போம்...
இடியாப்போம் இடியாப்போம்
பிடிக்காம விடமாட்டோம்...செ. இராசா
02/06/2025
பெருங்கருணை மெல்லிசையே

01/06/2025
படித்த படிப்பொன்றாய்
26/05/2025
வருகிறோம் வளர்கிறோம்
