30/08/2008

என் அன்பின் அரசியே

என் அன்பின் அரசியே....
நீரில்லா இடம் பாலைவனமாம்
நீரில்லா இடமும் பாலைவனம்தான்....

உன் அன்பு வார்த்தைகள்
தினமும் காதில் விழுந்தாலும்
நீ அருகில் இல்லாத இரவுகள்
காகிதப் பூவைப் போல்தான்....
பார்க்கலாம் ஆனால் மணமில்லை
பருகலாம் ஆனால் சுவையில்லை
பேசலாம் ஆனால் அதில் ரசமில்லை
ஆம்
என்னதான் கிரகாம்பெல்லின் கண்டுபிடிப்பு
நமக்கு உதவினாலும்
தூரத்தின் பிரிவு
வலியும் வேதனையும் கலந்ததே.......

உன்னை அன்று நேசித்தேன்
ஆனால் இன்று நான்
என்னுள் உறைந்த
ஒன்றாகவே உணர்கின்றேன்.....

நம் பிரிவு நிரந்தரமில்லைதான்
ஆனால் இனியும் அது தொடருமாயின்
அதைத்  தாங்கும் வலிமை எமக்கு இல்லை
அறிவாயா ..........?!!!!!!!