28/03/2019

#தேநீர்_தியானம்_4






உன்னோடு நானிருக்கும்
ஒவ்வொரு நொடித்துளியும்
என்னை “நான்” இழப்பதை
எப்படி நான் சொல்லிடுவேன்?!

கண்ணுக்குள் சென்றெந்தன்
கவிதைக்குள் வருவாயே..
மௌனத்தில் பேசி என்னுள்
மோனத்தை விதைப்பாயே..

புரட்டும் போதெல்லாம்
புதியதாய் இருப்பாயே..
முடிந்த பின்னாலும்
தொட்டிடவே செய்வாயே..

அடி அடியாய் ருசிக்கையிலே
ஆனந்தம் தருவாயே...
வரி வரியாய் வந்தென்னுள்
வசீகரம் செய்வாயே...

உன்னோடு நானிருக்கும்
ஒவ்வொரு நொடித்துளியும்
என்னை “நான்” இழப்பதை
எப்படி நான் சொல்லிடுவேன்?- சொல்
எந்தன் #நல்ல_புத்தகமே சொல்

✍️செ. இராசா

#தேநீர்_தியானம்_4

No comments: