20/03/2019

#தேநீர்_தியானம்_2




ஒவ்வொரு தேனீர் கோப்பையும்
ஒவ்வொரு கவிதையே...
அது ருசிப்பவனை
ஏதோ ஒன்று செய்வதால்...

பெரும்பாலும்
தர நிர்ணயங்களில்
தரும் கரங்களும் சேர்ந்து விடுகிறது

இங்கே
அனைத்து ருசிகளுக்கும்
ஆட்கள் இருப்பதால்
கொடுத்ததையே கொடுக்க
கோப்பைகளேகூட விரும்புவதில்லை..

சில சமயங்களில்
சூடு அதிகமாகும் போது
விமர்சன நாக்குகளில்
விருந்தாகி விடுகிறது.....

சில சமயங்களில்
சூடு குறையும் போது
விலக்கும் தீர்மானத்தை
விரல்களே எடுத்து விடுகிறது..

இதில்
இனிப்பின் அளவீடுதான்
இன்னும் தடுமாறுகிறது...
எது சரியென்று தெரியாமல்!!!

No comments: