25/08/2017

முயற்சி திரு விநாயகரே----களஞ்சியம் கவிதைப் போட்டியில் (68) பங்குபெற்ற கவிதை



(25.08.2017)

முயற்சியால் முடியாத காரியம்
உலகில் உள்ளதாய் நினையாதே!
முயற்சியால் வெற்றிகள் தருகின்ற
உகரக் கடவுளை மறவாதே!

முயற்சியே திருவினை ஆகுவதால்
முயல்வதை வாழ்வில் நிறுத்தாதே!
முயற்சியால் அருள்திரு விநாயகரே
முக்தியை அளிப்பார் மறவாதே!

முயன்றும் எதுவும் முடியலையா?!
முன்வினைச் செயலென அறிந்திடுவாய்!
முன்வினைத் தடைகளை அறுத்திடவே
முதல்வனின் கால்களில் வீழ்ந்திடுவாய்!

முயற்சியை என்றும் நிறுத்தாது
வாழ்க்கையில் தினமும் முயன்றிடுவாய்!
முயற்சியின் இலக்கினை அடைவதற்கு
விநாயகர் துணைவர வேண்டிடுவாய்!

-------செ. இராசா------