24/03/2019

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா!- வெண்பா_8


சோதனை நாயகா! சூழ்நிலைக் காவலா!
வேதனை தாண்டிய வித்தக சோதரா!
ஓடியே வந்திடும் உண்மையின் காதலா!
பாடினேன் நானொரு பா!

**********^^^
கவிதையாய் இல்லாமல், கொஞ்சம் பழைய அந்த எதார்த்த வரிகளில் உன்னோடு
சில நினைவுகளை அசை போடுகிறேன் நண்பா இங்கே....
******************************

முதல் சந்திப்பு....
எட்டாம் வகுப்பு
ஒக்கூர் பள்ளி
எப்போதும் சண்டை
அப்போதும் நட்பு
முட்டாள் ராசா நாடகத்தில்
முட்டாள் ராசாவாய் நான்
பேட்மிட்டன் ஆட்டத்தில்
ஆட்ட நாயகனாய் நீ
தெக்கூர் பிரிவில் எழுதிய முதல் மடல்
பிள்ளையார்பட்டிக்கு போன டூர்
அம்மாவின் திருக்கை மீன் குழம்பு
50 காசுக்கு அரைபக்கத் தத்துவம்
அப்பா தயவில் பொறிஞராய் நான்
உந்தன் முயற்சியில் ஆசிரியராய் நீ
அம்மாவின் இழப்பு
அடுத்தடுத்த இடிகள்
.....
நீயும் நானும்
மாறி மாறி ஓடியது
இன்னும் ஓடுவது
சோகமும் துக்கமும்
மாறி மாறி துரத்தியது....
இன்னும் துரத்துவது
என்ன ஆனாலும்...
என்ன வந்தாலும்...
அந்தப் புன்னகை
அதுதான் நண்பா உன் நகை
அதுதான் நண்பா பொன் நகை
போதும்டா...அது போதும்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா!

No comments: