22/03/2019

#தேநீர்_தியானம்_3




ஒன்றோடு ஒன்று கூடினால்
சந்தோசம் என்கிறார்கள்...
ஆம்..
கூடலில் தானே கூடுகிறது
புவியுலகின்
புது வருகை...

இங்கே
கூடக்கூடத்தான் சந்தோசம்

பணம் கூட
பதவி கூட
உதவி கூட
உயரம் கூட
உறவு கூட
உடுப்பு கூட
.......
இப்படி இன்னும்
கூடக்கூடத்தான் சந்தோசம்

எனில்
கழித்தல் துக்கமா?!!
யார் சொன்னார்கள்?!
அடக்கியவனுக்குத் தானே தெரியும்
ஆனந்தக் களி(ழி)ப்பு

செல்வந்தனுக்குத் தானே தெரியும்
செலவின் களி(ழி)ப்பு

ஏறும் படிக்கட்டைவிட
இறங்கும் சருக்கலில்தானே
ஆனந்தம்...
சந்தேகமெனில்
குழந்தையாய்மாறி
பூங்கா செல்லுங்கள்

ஏற்றும் சரக்கைவிட
இறக்கும் போதையில்தானே
சந்தோசம்
சந்தேகமெனில்,
என்னது சந்தேகமா?!!
மன்னிக்கவும்....

உண்மையில் கழித்தல் இன்பமானதே?
ஆனால்
உயிர்களின் கழித்தல் துன்பமாயிற்றே?!

இதையெல்லாம்
நாளைய பிணங்கள் சொல்லக்கூடாது
முன்னால் உயிர்களே சொல்ல வேண்டும்

உண்மையில்
கூட்டலையும் கழித்தலையும்
சமமாய்ப் புரிந்தவர்களே
சமாதியாய் ஆகிறார்கள்...
ஆம்..
ஆதிக்கு சமம் ஆகிறார்கள்

#தேநீர்_தியானம்_3

✍️செ.இராசா

No comments: