28/03/2019

#கற்றது_கையளவு_4



முன்பெல்லாம் சமூக வலைத்தளங்களில் மக்கள் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. ஆனால், தற்போது அப்படி இல்லை. கைப்பேசி உள்ளவர்கள் அனைவருமே பெரும்பாலும் வாட்சப் அல்லது முகநூல் பயன்படுத்துகிறார்கள். அதிலும் இந்த யூடியுப் தெரியாதவர்கள் கிடையவே கிடையாது என்றே சொல்லலாம்.

ஆரம்பத்தில் பொழுதுபோக்காக நுழைந்து அதிலேயே மூழ்கியவர்கள் அதிகம். அதை வர்த்தக ரீதியில் பயன்படுத்த முயல்பவர்களும் ஏராளம். அது எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இதில் எப்படி அந்த நிறுவனங்கள் பணம் செய்கின்றன என்பதை பார்ப்போமா (எனக்குத் தெரிந்ததை மட்டும் இங்கே எழுதுகின்றேன்).

நிறைய பேரிடம் பணம் வாங்கி கொஞ்ச பேரிடம் கொடுக்கும் மிகத் தந்திரமான வேலையை மட்டுமே இந்த யூடியுப் போன்ற சமூக வலைத்தளங்கள் செய்கிறது என்றால் நம்புவீர்களா?. முன்பெல்லாம் கட்டுப்பாடுகள் குறைவாக வைத்திருந்த யூடியுப், தற்போது பணம் சம்பாதிக்க நிறைய மாற்றியுள்ளது. நம் காணொளியை எவ்வளவு நபர்கள் பார்க்கிறார்களோ அதற்கு அவன் தருகிறான் பணம், ஏன் தெரியுமா? இடையிடையே விளம்பரம் போடுவதற்கு பணம் வாங்கலாம் என்பதையும் தாண்டி, வேறு ஒரு கோக்குமாக்கு வேலையும் உள்ளது நண்பர்களே.....

அதாவது உங்கள் காணொளியை எத்தனை பார்வையாளர்கள் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதற்கும் நீங்களே பணம் கொடுக்க வேண்டும். அதற்குப் பெயர் ப்ரோமோஷன். பணம் கட்டிய சற்று நேரத்திற்குள்ளாக பார்வையாளர்கள் கணக்கு மாறிவிடும். உண்மையில் இந்தக் கணக்கை நாம் யாரும் சரிதானா என்று கேள்வி கேட்க முடியாது. ஆனால் இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒரு தொகையை நிறைய பேரிடமிருந்து வாங்கிவிடுவான் அவன். மிகவும் குறைவானவர்களுக்கே திரும்பக் கொடுக்கிறான்.

முகநூலில் இது சற்று வேறு மாதிரி உள்ளது. அதாவது, தங்களின் சாதாரண கணக்கோடு, தாங்கள் பேஜ் (பக்கம்) என்று தனியாக எத்தனை வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். அங்கே தங்கள் பக்கத்தை விளம்பரம் செய்யலாம். உதாரணமாக, என் விளம்பரம் எந்தத்த பகுதிக்கு காண்பிக்க வேண்டும் எத்தனை நாட்கள் காண்பிக்க வேண்டும் என்பதைப் பொருத்து ஒரு தொகை. இங்கேயும் காணொளிக்கு பார்வையாளரைக் கூட்டிக் காண்பிக்க ப்ரோமோஷன் உண்டு.

ஆக, இங்கே அனைத்தும் பணம் பணம் பணம் மட்டுமே. நாம் கவனமாகக் கையாண்டால் முகநூல் போன்ற சமூக மாய வலையில் சிக்காமல் தப்பிக்கலாம்.

செ. இராசா

No comments: