04/03/2019

#சாது_மிரண்டால்--குறளின்_குரலில்




#சாது_மிரண்டால் தாங்காது
சூது வாதில் கொல்லாதீர்..
யாதும் இனிமேல் செல்லாது
தீது எண்ணம் கொள்ளாதீர்..

ஆதி முதலே சொல்கின்றோம்
காதில் இன்னும் விழுகலையா?!
ஓதி ஒதி உரைக்கின்றோம்
மோதி மோதி உரைக்கனுமா?!

கூட்டம் சேர்த்து வந்தாலும்
ஆட்டம் பாட்டம் செல்லாது..
எருமைக் கூட்டம் எந்நாளும்
எருதை வெல்ல முடியாது...

✍️செ. இராசா

பிற்சேர்க்கை
**************
ஆட்டம் பாட்டம் படுகாளி!
அடங்கிப் போகும் தக்காளி
ஓட்டம் எடுப்ப பிக்காளி!
ஒடுங்க வைப்பாள் வெக்காளி!

(ஒரு தலைப்புக்காக எழுதியது)

No comments: