18/03/2019

கல்வியின் பயன் (குறளின் குரலாய்)


கற்கா காலம் கற்காலம்!
கற்ற காலம் தற்காலம்!
அறிவில் சிறந்தது எக்காலம்?
அறிவின் உயர்வே பொற்காலம்!


கற்றதில் வருவது
...........அறிவென்றால்-உயர்
அறிவில் நிற்பது அறமாகும்!

அறத்தின் உச்சம்
...........அன்பென்றால்- உயர்
அன்பின் உச்சம் அருளாகும்!

அருளில் பெருவது
............துறவென்றால்-உயர்
அருளால் உணர்வது இறையாகும்!

✍️செ. இராசா

No comments: