25/03/2019

#அன்னைத்_தமிழ்_யாசகனாய்_நான்



அன்பு பெருக்கெடுக்க
ஆசை ஊற்றெடுக்க
இன்பம் கூடிவர
ஈரம் கண்ணில் வர
உள்ளம் உருகி நிற்க
ஊமையாய்த் திகைத்து நிற்க
என்னை மயங்க வைத்து
ஏகனை மறக்க வைத்து
ஐந்து இந்திரியத்தை
ஒன்றில் உணர வைத்து
ஓங்கிச் சொன்னாயே?!-உன்
ஔதாரியம் புரியலையே...
அஃதே நீயென்று
அன்றைக்குத் தெரியலையே

அத்தனை அலட்சியமாய்
எப்படி நானிருந்தேன்?!!

சிந்திய பூக்களை எல்லாம்
சேமிக்க மறந்தேனே...
எடுத்த மலர்களை எல்லாம்
தொடுக்க மறந்தேனே....
தொடுத்த மாலை எல்லாம்
தொலைத்தும் விட்டேனே...

நான் செய்த அலட்சியத்தால்
நீ என்னை மறந்தாயோ?!!

#அன்னைத்_தமிழ்_யாசகனாய்_நான்

✍️செ. இராசா

No comments: