12/03/2019

செ. இராவின் குறள்கள் & இருவிகற்ப வெண்பா_3



செ. இராவின் குறள்கள்
***********************
வாழ்த்தும் வழக்கம் வருமெனில் இன்புற
வாழ்ந்திட வைப்பான் இறை!

#செரா_குறள்_6

வாழ்க வளமுடன் வாழ்த்தில் மனிதனின்
வாழ்வில் வருமே நிறை!

#செரா_குறள்_5

கண்டதைச் சொல்லும் கவிஞனே மெய்யெனக்
கண்டதை மட்டுமே சொல்!

#மீள்4

உண்ணா விரதம் சிறப்பெனினும் எண்ணமே
எண்ணா விரதம் சிறப்பு!

#மீள்3

நிறைய எழுதுவது நன்றல்ல உன்னில்
நிறைய எழுதுவதே நன்று!

#மீள்2

எப்போதும் எல்லாமும் எல்லோர்க்கும் கிட்டாது
தப்பாமல் தப்பின்றித் தாக்கு!

#மீள்1

இருவிகற்ப வெண்பா
*********************
எதிர்மறை எண்ணம் இருந்தாலோ இங்கே
எதுவும் தவறாய்த் தெரியும்- இதயத்தில்
நேர்மறை எண்ணம் இருந்தாலோ உண்மையில்
நேர்வதை ஏற்கும் மனது!

✍️செ. இராசா

என்னை மரபு எழுத ஊக்கப்படுத்திய
அண்ணன் விக்டர்தாஸ் கவிதைகள்அவர்களுக்கும், வழிகாட்டிய நண்பர் அகரம் அமுதன் ஐயா மற்றும் தம்பி Anandh Umesh அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments: