23/03/2019

பின்னூட்ட வெண்பா (6 & 7)--கவிஞர் அ முத்துசாமி தாரமங்கலம் & கவிஞர் அகன்

கவிஞர் அ முத்துசாமி தாரமங்கலம் அப்பா அவர்களின் அழகிய இரட்டைக்கிளவிக் கவிதைக்கு அளித்த பின்னூட்ட வெண்பா

(1)
இரட்டைக் கிளவியின் இன்பம் இனிதே
இரட்டை இடியில் இனிக்கும்- சரமாய்
வரட்டும் கவிகள் வரட்டும் கவியே
விரட்டும் கவியில் மிரட்டு!


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

கவிஞர் அகன் மாமாவின் அழகிய இன்னிசை வெண்பாவிற்கு வழங்கிய பின்னூட்ட வெண்பா

(2)
ஆடிய ஆட்டத்தில் அங்கங் குலுங்கிடக்
கூடிய கூட்டத்தைக் கொற்றவன் கண்டிட
ஊடிய நாட்களை உள்ளத்தில் எண்ணிட
பாடினான் கூடலின் பாட்டு!

✍️செ.இராசா
(பெரிய இரண்டு கவிஞர்களோடு என் இரு கவிக்குழந்தைகள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.)

No comments: