09/03/2019

புல்லென்று நீயும் நினைத்தாயோ?!!



தேடித்தேடி நிதம் எழுதி- பலர்
நாடி விருப்பீடு தந்து- அதில்
கூடி மகிழ்கின்ற போது- அதைக்
கோடிப் புகழென்று எண்ணி- அஃது
ஆடி காற்றாகிப் போக- மனம்
வாடி வதங்கியே நின்று- பல
உறவைத் தினந்தோறும் திட்டி- பின்னர்
உளறல் கவிதைகளைக் கொட்டி- சில
புலம்பும் நண்பர்களைப்போலே- நான்
புல்லென்று நீயும் நினைத்தாயோ?!!

✍️செ. இராசா

(சத்தியமா இதுவும் கற்பனைதானுங்கோ..)

3 comments:

வேல்கவி.பெ said...

ஆகச்சிறந்து இன்றைய மனிதர்ளின் மனநிலையின் பதிவு கலியுகத்து எழுச்சி கவிஞரே.

வேல்கவி.பெ said...

ஆகச்சிறந்த இன்றைய மனிதர்களின் மனநிலையின் வெளிக்காட்டும் கவிதைபதிவு மகாகவி பாரதியின் நடையில் சிந்தனையை பயணிக்கவைத்து தமிழ்நடையை சந்தமும்ம் தத்தாரமும் மாறாமல் பதிவிட்டுள்ளீர்கள் கலியுகத்துஎழுச்சி கவிஞரே!

வேல்கவி.பெ said...

ஆகச்சிறந்த இன்றைய மனிதர்களின் மனநிலையின் வெளிக்காட்டும் கவிதைபதிவு மகாகவி பாரதியின் நடையில் சிந்தனையை பயணிக்கவைத்து தமிழ்நடையை சந்தமும்ம் தத்தாரமும் மாறாமல் பதிவிட்டுள்ளீர்கள் கலியுகத்துஎழுச்சி கவிஞரே!