18/08/2020

அவளும் உன் உறவுதான் அவளை வையாதே

 

 


அவளும் உன் உறவுதான்
அவளை வையாதே....

ஒன்று சொல்லட்டுமா?!
உனக்கும் முன்பான உறவது
இன்றும் தொடரும் நிலவது
என்ன செய்ய?!!
அவளை வையாதே..

நன்றாக ஞாபகம் உள்ளது
அவளால் தொடங்கிய
அந்தநாள்....

ஏதோ...ஓர் உணர்வு
ஏதேதோ செய்தது...
உளறுகிறேன் என்றனர்
உளத்திலதை ஏற்கவில்லை...
இன்றும்தான்...

உடனே உன்னைவிடவா அவளென
உரிமைப் போராட்டம் நடத்தாதே
அந்த வார்த்தைக்கே இடமில்லை

ஆம்...நீ நானாவாய்...
ஆனால் அவள் மூச்சாவாள்...
எனில்...
அவள் யார்....? கவி!!

✍️செ.இராசா

No comments: