03/08/2020

உன் பொன்நிற மேனியைச்சொல்லவா..

 


உன் பொன்நிற மேனியைச்சொல்லவா...
உன் பொசுபொசு கன்னத்தைச் சொல்லவோ..
எதைச் சொல்ல?!!

ஒவ்வொரு முறையும்
என் விரல்கள் தீண்டும்போது
உன் அனல் மூச்சில் பதில் தருவாயே.
அதைச் சொல்லவா?

இல்லை...
உன்னைக் கிள்ளி அள்ளி
என் இதழ்களின் இடைவெளியில் இடுகின்ற
......................
...அந்தத் தருணத்தைச் சொல்லவா?

அப்பப்பா.....
எதைச் சொல்ல?!!

ஏனோ தெரியவில்லை
இத்தனை வயதானாலும்
இன்னும் குறையவில்லை
உன் மேலுள்ள ஈர்ப்பு!

ஆம்...
நீ என்றும் என் செல்லப் பூரியே...

செ. இராசா

(என் மகள் என் பையனிடம் சவால் விட்டுள்ளாள். இந்தப் படத்தைக் கண்டவுடன் அப்பாவிற்கு எச்சில் ஊறுமென்று........அவளின் கணிப்பை நான் பொய்யாக்கவில்லை)

No comments: