06/08/2020

2001.... நுங்கம்பாக்கம்

 

 


நன்றாக ஞாபகம் இருக்கிறது
நமக்கான அந்த முதல் சந்திப்பு....

2001....
நுங்கம்பாக்கம்..
ரயில்வே நிலையம்...

நீ..
இமாச்சலத்திலிருந்து
இறங்கி வந்ததாய்ச் சொன்னார்கள்...
கண்களால் பருகியபோதே உணர்ந்தேன்..

நீ..
சூட்டைக் குறைக்கும்
குளுகுளு ஊட்டி என்றார்கள்
தொட்ட மாத்திரமே உணர்ந்தேன்

நீ..
இந்திரன் விரும்பும்
பேரின்பம் என்றார்கள்..
உன்னை பருகிய ஒவ்வொரு கணமும் உணர்ந்தேன்..

நீ
அன்று மட்டுமல்ல
இன்றும்.... என்றும் ...
என் அன்பின் பழச்சாறே...

#நான்_விரும்பும்_ஆப்பிள்_பழச்சாறு

No comments: