ஆங்கிலத்த கலந்து கலந்து
அசிங்கப்படுத்துறான்..
ஆண்டதமிழ்ப் பரம்பரைன்னு
அலட்டிக்கொள்கிறான்...
வானொலியில் வாயிகிழிய
வறுத்து எடுக்கிறான்...
காணொளியில் கருத்துச்சொல்லி
கழுத்தை அறுக்கிறான்..
தம்பி நிறுத்து....என்ன சொல்ல வர்றீங்க?!
மும்மொழிகள் வேணான்னு
முரண்டு பிடிக்கிறான்..
நம்மொழியில் ஆங்கிலத்த
எதுக்கு கலக்குறான்?
டங்கிலீசில் பேசிப்பேசி
தமிழக் கெடுக்கிறான்....
இந்திபீசு நகிநகீன்னு
எரிஞ்சு விழுகுறான்...
ஐயோ... .என்னப்பா சொல்ற...
எம்மொழியும் கத்துக்கலாம்
தப்பு இல்லீங்கோ
என்மொழியை கெடுக்கிறது
தப்பு தானுங்கோ
பன்மொழியில் பேசுவது
புலமை தெரியுங்கோ
எம்மொழின்னு சொல்றதுக்கு
நீங்க யாருங்கோ?!!!
சுதந்திர இந்தியாவில் மாநில உரிமைகள்
மதிக்கப்பட வேண்டும்...
ஆங்கிலம் கலக்காத தமிழில் அவசியம் பேச வேண்டும்....
#மொழிச்_சுதந்திரம்_நமது_உரிமை
No comments:
Post a Comment