10/08/2020

பிறந்த மண்ணைவிட்டு பிழைக்க வந்தோங்க

 

 


பிறந்த மண்ணைவிட்டு
பிழைக்க வந்தோங்க..
உழைச்ச‌ களைப்போடு
ஊட்டுக்கு வருவோங்க..
இருப்பத ஆக்கித்தான்
ஏதோ திம்போங்க

அப்படித்தான் அன்னைக்கும்
அசதியா வந்தோங்க..
இடிமழை எல்லாமே
எப்போதும் இருக்குங்க‌‌...
பழகிய சங்கதீன்னு
படுக்கத்தான் போனோங்க...

விடியல் வருமுன்னே
வீட்டைக் காணோங்க...
கூட்டமாய்க் குடியிருந்தக்
குன்றையும் காணோங்க..
சரிஞ்ச மலைக்குள்ள
சடலமாய்ப் போனோங்க...

செத்த கணக்குக்குள்ள
சேர்த்திடுங்க ஐயா..
பெத்த பிள்ளைக்கு
சொல்லிடுங்க ஐயா
ஆத்தா உசுருக்கு
அஞ்சு லெட்சமுன்னு..

#உயிரின்_விலை

✍️செ.இராசா

(உயிருக்கு இழப்பீடு தரமுடியாதுதான் இருப்பினும் அதிலுமா பாகுபாடு? விமான விபத்தில் இறந்தால் பத்து இலட்சம், மலை விபத்தில் இறந்தால் ஐந்து இலட்சமா?! ஏன்?)

No comments: