06/08/2020

எமனின் வருகையை பெரிதாகப் பேசும் நாம்

கண்ணுக்கே தெரியாத கொரோனா
காவு வாங்குகிறதே என்றேன்

கண்ணுக்கே தெரியாத காற்று
பல உயிர்களைக் காப்பாற்றுகிறதே
என்கிறான் என் மகன்

ஆம்..
எமனின் வருகையை
பெரிதாகப் பேசும் நாம்தான்
சிவனின் இருப்பை
பேச மறக்கின்றோம்...

✍️செ.இராசா

No comments: