06/08/2020

கடன்

 


ஊரடங்கு காலத்தில்தான்
கூடிக்கொண்டே போகிறது
கடன் சுமை
(1)

உள்ளவருக்கே கொடுக்கப்படுமென்ற
வேதவாக்கு ஊர்ஜிதமானது
வங்கிக் கடனில்
(2)

வாங்க வாங்க
கூடிக்கொண்டே போகிறது
கடன் வட்டி
(3)

போட்ட நகையெல்லாம்
பாதுகாப்பாக இருக்கிறது
மார்வாடி கடையில்
(4)

உரசி உரசியே
உருக்குலைந்து போகிறது
அடமான நகைகள்
(5)

✍️செ. இராசா

#துளிப்பாக்கள்

No comments: