27/08/2020

கல்யாணம் பண்ணி வய்யிப்பா


 

 #கல்யாணம்_பண்ணிவை
#பாடல்
#மதுரை_வழக்கு
#கற்பனையல்ல_நிஜம்
#கதை_நாயகன்_தம்பி_தினேஷ்
#அவரின்_கதையே_பாடலாக

கல்யாணம் பண்ணி வய்யிப்பா- எனக்கு
கல்யாணம் பண்ணி வய்யிப்பா
கல்யாணம் பண்ணி வய்யிப்பா- எனக்கு
கல்யாணம் பண்ணி வய்யிப்பா

என்னடா அவசரம்.....?!

குடுகுடுன்னு பண்ணிக்கிட்டால்
சடசடன்னு பெத்துக்கலாம்...
சடசடன்னு பெத்துக்கிட்டால்
கிடுகிடுன்னு வளர்ந்துடுங்க..
கிடுகிடுன்னு வளந்துச்சுன்னா
விடுவிடுன்னு விலகிடலாம்..
விடுவிடுன்னு விலக்கிப்புட்டால்
சரிவிடுன்னு ஒதுங்கிடலாம்!

.....(கல்யாணம் பண்ணி..)

என்னடா சொல்ற?!

தடபுடலாக் கேட்கலப்பா
கடகடன்னு பண்ணிவைய்யி
காசுபணம் இல்லையினா
கடன உடன வாங்கிடலாம்..
கடனும் உடனே கிடைக்கலைனா
எவனும் வேணா விலக்கிடுப்பா
அதுவும் உனக்குப் பிடிக்கலைனா-நீ
அப்பனே இல்லை விலகிடுப்பா..

.....(கல்யாணம் பண்ணி..)

இவன் யார்ரா?
பொண்ணு வேணுமுலடா??

அங்குட்டு இங்குட்டு எங்குட்டுப் போற
அத்தை பெத்தது இருக்குதுல்ல..
கட்டையோ குட்டையோ உனக்கு என்ன
கட்டிட்டு வந்தால் இருக்குமுள்ள..
கட்டிலும் மெத்தையும் எதுக்கு வேணும்
கட்டாந் தரை இருக்குதுல்ல..
இன்னும் என்ன வயசு இல்லை
யோவ்.‌‌......நானும் உன்னோட புள்ளை..

.....(கல்யாணம் பண்ணி..)

✍️செ.இராசா

(இதில் அந்த கோட்டு போட்டவர்தான் அந்தத் தம்பி...என் அன்புத் தம்பி)

No comments: