13/08/2020

தினம்தினம்‌ கவிதையில்

 


தினம்தினம்‌ கவிதையில் உலவிடத் துடிக்கிறேன்!
கணம்கணம் புதுவிதம் உளவியல்
படிக்கிறேன்!
மனம்தரும் சுகமெனத் தனிமையில்
களிக்கிறேன்!
சினம்தரும் உறவினைத் தவிர்த்திட
முயல்கிறேன்!

சரிதானே....அது... சரிதானே?!

பிறரைத் திருத்திடப் பிறந்திடவில்லை-நீ
மறப்பதைத் தவிர்த்தோர் வழியுமில்லை
வெறுப்புடன் பழகிடத் தேவையுமில்லை-நீ
பொறுப்புடன் விலகினால் தொந்தரவில்லை

வெறுக்காதே.‌...நீ..விலகிடுவாய்!

✍️செ.இராசா

No comments: