17/08/2020

வள்ளுவர் திங்கள-124-----------புறங்கூறாதே

 


திறம் பார்க்கா விட்டாலும்
நிறம் பார்க்க வேண்டாமே!
அறம் போற்றா விட்டாலும்
புறம் தூற்ற வேண்டாமே!
 
 
கரம் பற்றா விட்டாலும்
சிரம் தட்ட வேண்டாமே!
உரம் ஊற்றா விட்டாலும்
வரம் கொய்ய வேண்டாமே!
 
நிசம் பேசா விட்டாலும்
விசம் கொட்ட வேண்டாமே!
வசம் சேரா விட்டாலும்
வதம் செய்ய வேண்டாமே!
 

No comments: