01/08/2020

இன்னாப்பா...வள்ளுவரு வந்துகினாரு

 

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
 
இன்னாப்பா...
 
இன்னா இன்னான்னு கூவுற.....
இது திருக்குறள்பா...
 
அட..சோக்காகீது..பா..
 
வள்ளுவரு வந்துகினாரு
..........வடசென்னை பாருங்கோ
அள்ளுவிடும் பாஷையில
..........அசத்துகிற ஆளுங்கோ
இன்னாமா கூவுறாரு
..........இன்னான்னு கேளுங்கோ
அண்ணாத்தே நம்மாளு
..........அந்தாண்ட நவுருங்கோ
 
✍️செ.இராசா

No comments: