22/05/2022

உனைக்காணும் ஒரு நொடி

 

உனைக்காணும் ஒரு நொடி
...உயிர்ப்பூக்கும் மறுபடி
விடைதேடும் பிணியினி
...மகிழ்வாகும் கவனி நீ...
எமை எழுப்பும் ஒலியினி
.... இதழாலே எழுப்புநீ
கவிணான பிரளயமும் நீ நீ நீ
 
அந்தி நேரத்துக் கடற்கரையில்
....அணைக்கையிலே அது சுகமே
வண்டி வேகத்தில் பறக்கையில்
....வளைக்கையிலே அது சுகமே
உந்தன் மடியினில் தவழ்கையில்
....தலைமுடியைக் களையனுமே.
 
சிந்தும் மழையினில் நனைகையில்
...குடையெனவேத் தழுவனுமே...
கணம் கணம் இனிதெனக் கழியுமெனில்
... கவியென மாறிடும் காதலுமே...
காதலுமே
காதலுமே
 
✍️செ. இராசா

No comments: