05/05/2022

பல்லக்கு

 


பல்லக்கின் மேலிருந்து
......பட்டணத்தைப் பார்ப்பானும்
பல்லக்கு தூக்குவதைப்
......பாக்கியமாய்ச்- சொல்வோனும்
என்றென்றும் நல்லறத்தை
......ஏற்றிடார் என்றுசொன்ன
அன்றைய வாக்குபோல் ஆச்சு!
 
✍️செ. இராசா
 
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
 
பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃதென்று கூற வேண்டாம்.

No comments: