07/05/2022

 


நேற்றைய தினம் வெளியே சென்றிருந்தபோது வண்டியின் பின்பக்க டயர் வெடித்துவிட்டது. வண்டியை ஓரம் கட்டி முதலில் சாலையில் அபாயக்குறிக்கான அடையாளத்தை வைக்கலாமென்றால், அது சரியாக நிற்காமல் கீழேகீழே விழுந்தது. உடனே என் பையன் அதிலிருந்த குறையைச் சரிசெய்து "இப்போது பாருங்கள்" என்று சாலையில் வைத்தான். 
 
பிறகு, ஜாக்கியை எடுத்து மாற்று டயர் மாற்றும் வேலையில் இறங்கியபோது, லீவரை எடுத்து எடுத்துப்போட்டு சுற்றினேன். பிறகு அதே வேலையைப் பையனிடம் கொடுத்துவிட்டு, புதிய டயரை எடுக்க டிக்கியைத் திறக்கப்போனேன். அப்போது என் பையன் எப்படி அந்த லிவரைக் கையாள்கிறான் என்று பார்த்தால், வெகு சுலபமாக ஒரு நேர்த்தியான மெக்கானிக்போல் லீவரை வெளியே எடுக்காமல் கீழே மேலேயென்று மாற்றி மாற்றி வேலையை முடித்தான். எப்படி இதெல்லாம் தெரிந்துகொண்டான் என்று தெரியவில்லை (என் இரண்டாவது தம்பி இரமேஷ் மிகப்பெரிய மெக்கானிக். எவ்வளவு பெரிய பேருந்தையும் குறைந்த நேரத்தில் சரிசெய்யும் அசாத்திய வேலைக்காரன். ஆனால் நான் வாகனம்பற்றி ஒன்றுமே அறியாதவன். எனக்கு அவனே என் மகனாகத் தோன்றினான்) 
 
அதேபோல் மாலைநேரத்தில், இதுவரையிலும் இயங்காத அல்லது இயக்கத்தெரியாத கிம்பெல் என்னும் வீடியோ எடுக்கும் கருவியை, யூடிபைப் பார்த்தே காலிபிரேசன் செய்து இயங்க வைத்தான். மக்களே....இதெல்லாம் அவன் என் மகன் என்பதால் இங்கே சுயதம்பட்டம் அடிக்கவில்லை. இக்காலப் பிள்ளைகளை நாம்தான் வளர்ப்பதாய் நினைத்து நாமாக ஒரு மதிப்பீடு வைக்கின்றோம் அல்லவா?! அதுவல்ல அவர்களின் தோற்றம் என்பதை உணர்த்தவே முயல்கின்றேன். மேலும், இங்கே பிள்ளை வளர்ப்பில் எதுவும் தனியாக செய்ய வேண்டாமென்றும் அதற்கானச் சூழலை அமைத்துக் கொடுத்தாலே போதுமென்றும் எண்ணுகிறேன். சரிதானே உறவுகளே?!
 
✍️செ. இராசா

No comments: