16/05/2022

காலமும் நேரமும் வெண்பாக்கள்

 

எதிர்பாரா நேரத்தில் எங்கிருந்தோ வந்தால்
அதிசயம் தானே அது?!
(1)
 
எதிர்பார்த்த எல்லாமும் ஏமாற்றம் தந்தால்
புதிராகும் தானே பொழப்பு?!
(2)
 
பிறபலம் இல்லார் பிரபலம் ஆனால்
மறவாதே ஊழின் வலி!
(3)
 
விழுவது யாவும் விளையுமா என்ன?
எழுவது தானே எழும்?!
(4)
 
குப்பைக் குணவானும் கோபுரத்தின் மேல்நின்றால்
தப்பைச் சரியென்பர் சார்ந்து!
(5)
 
தேவைக்கு மாத்திரம் தேடிவரும் நண்பர்கள்
தேவையா என்றே தெளி!
(6)
 
நம்மை நினையாரை நாமெண்ணி வாழ்தல்போல்
நம்மை நினைப்பாரும் உண்டு!
(7)
 
இறந்தபின் ஆழ்ந்த இரங்கலெனச் சொல்லி
மறந்திடும் மானுட வாழ்வு!
(8)
 
நடிக்கின்ற ஆளையே நல்லவனாய் நம்பும்
படித்தவர் கூட்டத்தைப் பார்!
(9)
 
காலமும் நேரமும் கைகூடும் போதில்தான்
ஞாலத்தை வெல்கின்ற வாழ்வு
(10)
 
✍️செ. இராசா

No comments: