18/05/2022

வரலாற்று வெண்பாக்கள்

 


 #வரலாற்று_வெண்பாக்கள்

காங்கிரசார் ஆடிய கண்றாவி ஆட்டத்தால்
தாங்கொண்ணாப் பேரிழப்பு தான்!
(1)

பாக்கிஸ்தான் வாலறுக்க பார்த்திருந்த வல்லரசு
தாக்கியது வங்காளம் சென்று
(2)

இந்திரா காந்தியினால் இந்தியா வென்றதினால்
வங்காள தேசமெனும் நாடு
(3)

வங்காள தேசத்தை வைத்துவந்த ஓட்டெடுப்பில்
சிங்களத்தான் நிற்கவில்லை சேர்ந்து
(4)

சிங்களத்தான் வாலறுக்க சிந்தித்த இந்திரா
சங்கூதத் திட்டமிட்டார் சார்ந்து
(5)

உள்நாட்டுப் போரினை ஊதிப் பெரிதாக்க
அள்ளியள்ளித் தந்தார்கள் அன்று
(6)

காலத்தின் ஓட்டத்தில் காணாமல் சென்றுவிட
ஞாலத்தின் மாற்றத்தில் மைந்து!
(7)

தாயைப்போல் இல்லாத் தமையனார் செய்தபிழை
நாயைப்போய் ஏவிவிட்டார் வந்து!
(8.)

முன்வினைப் பாவமும் மூழ்ந்தெழுந்த சாபமும்
தன்வினையால் சுட்டதே சான்று
(9)

சட்டமும் நீதியும் தண்டனையைத் தந்தபின்னே
விட்டுவிடல் தானே முறை!
(10)

✍️செ.இராசா.

No comments: