13/05/2022

அந்த நாட்கள்

 

நடுத்தர வயதில்
அந்த நாட்கள் தள்ளிப்போனால் வரும்
பதட்டம் இருக்கிறதே....‌
அப்பப்பா சொல்லி மாளாது.....
 
எப்போதோ செய்த குடும்பக் கட்டுப்பாட்டில்
இப்போது சந்தேகம் வரும்....
தொட்டவுடன் பதில் சொல்லும் கூகுளோ
பலதகவல் தந்து பதற வைக்கும்...
தோழிகள் குழாமில் சொன்னாலும்
சகஜமென்றே பதில் வரும்...
ஏங்க....என்று அவரிடம் சொன்னாலோ
ஏக்கப் பெருமூச்சில் தீயெரியும்....
ஆனாலும்.....
அந்தச் செல்ல அணைப்பில்தான்
அந்த நாட்கள் மீண்டு(ம்) வரும்..
 
✍️செ. இராசா
 
(ஆண்களின் புரிதலுக்காக பெண்ணின் பார்வையில்

No comments: