29/05/2022

கேள்விகள் பத்து

 


 #கேள்விகள்_பத்து

சாராயம் பீரெல்லாம் தப்பில்லை என்றா;நீர்
தாராளம் காட்டுகின்றீர் தந்து!
(1)

வாயில் வடைசுட்டே வைத்திடலாம் என்றா;நீர்
வாயினிக்கச் சொல்கின்றீர் வந்து!
(2)

தேர்தலுக்கு முன்னாலே தீர்த்திடலாம் என்றா;நீர்
நேர்மையின்றி பேசுகின்றீர் நின்று!
(3)

ஆண்டவர்கள் தப்பென்றே ஆண்டிடலாம் என்றா;நீர்
வேண்டியதைச் செய்யவந்தீர் வென்று!
(4)

நெஞ்சத்து நீதியும் விற்பனைக்கே என்றா;நீர்
அஞ்சாமல் சொன்னீர்கள் அன்று!
(5)

ஊதிப் பெருக்கிடவே ஊடகங்கள் என்றா;நீர்
சேதிபலச் சொல்கின்றீர் சேர்ந்து!
(6)

யாரென்ன சொல்வார்கள் எம்முன்னே என்றா;நீர்
ஊரெல்லாம் விற்கின்றீர் கள்!
(7)

நக்கீரர் எல்லோரும் மௌனித்தார் என்றா;நீர்
இக்கட்டில் வைத்துள்ளீர் கள்!
(8.)

ஜால்ராக்கள் உள்ளவரை சந்தோஷம் என்றா;நீர்
சால்பின்றி செய்கின்றீர் கள்!
(9)

போசாக்கு பானமெல்லாம் போதையில்லை என்றா;நீர்
போய்சாக விற்கின்றீர் கள்!
(10)

✍️செ. இராசா

No comments: