21/05/2022

அடியே அழகே

 அடியே அழகே

.....அரும்பாக் கவியே

.......உனை நான் செதுக்க வாறேன்டி

அடியே இசையே

......எழும்பா விசையே

........உனை நான் இசைக்கப் போறேன்டி..


காகிதமா இருந்தாக்க யாருக்கென்ன இலாபம்?

காவியமா மாத்திடநான் காதலிச்சாப் போதும்

காகிதமா இருந்தாக்க யாருக்கென்ன இலாபம்?

ஓவியமா மாத்திடநீ ஓடிவந்தாப் போதும்..


அடியே அழகே.....ஆசைக் கவியே

அடியே இசையே....மேஸ்ட்ரோ விசையே...(2)


அடடா அழகா

...குறும்பாக் குமரா

.......இதுதான் கலக்கல் நடையாடா?!

அடநீ பொறுடா

......அலும்பைக் குறைடா

........ இல்லைன்னா விழுகும் அடிபோடா...(2)


இருந்தாலும் நீதான்டா என்னோட ஆளு

விருந்துண்ணும் முன்னாலே வேணாண்டா மோரு

வரும்போது வந்தாதான் வாழ்த்திடும் ஊரு

வரம்பநாம் மீறுனால் தூத்திடும் பாரு


அடடா அழகா...குறும்பாக் குமரா

அடநீ பொறுடா......அலும்பைக் குறைடா..(2)


✍️செ. இராசா

No comments: