17/06/2018

இயற்கை


ஆதவனும் அலைகடலும்
......... அன்போடு உறவாட
ஆதவனின் அனல்சூட்டில்
...........கருமேகம் உருவாக
குளிர்க்காற்றில் மழைநீராய்
...........மண்மேலே முத்தமிட
தளிர்க்கின்ற மரமெல்லாம்
....இயற்கையின் கொடையன்றோ?

ஆறறிவில் குறைவான
...........அத்தனை உயிர்களுமே
ஆடையில்லாத் துறவியென
............அகிலத்தைச் சுற்றிவர
இயற்கையின் நியதியிலே
............இரைதேடிப் பசியாற்ற
இயற்கையே இறையென்று
.......பறைசாற்றும் சாட்சியன்றோ?!

✍️செ. இராசா

No comments: