20/06/2018

மனிதநேயம்


கடவுள் பாதி.... மிருகம் பாதி
கலந்து செய்த கலவைகளாய்
மண்ணில் இங்கே பல உயிர்கள்
அங்கும் இங்கும் அலைகிறதே!

ஆறறிவின் மகத்துவமாய்
அன்பு கருணைப் பெருகினால்
மனிதரென்ற நிலை உயர்ந்து
புனிதரென்று மாறுமே!

ஆறறிவை இழந்தவராய்
அறங்களின்றி விளங்கினால்
மனிதரென்ற நிலை இழந்து
மிருகமென்று மாறுமே!

*************************************
ஆம்......மனிதநேயம் இல்லாத உயிரினங்கள் இனி மனித இனத்தில் சேராது
************************************

No comments: