06/06/2018

மண்ணில் புதைந்த எண்ணெயினை




மண்ணில் புதைந்த எண்ணெயினை
மனிதனின் அறிவால் வெளிக்கொணர்ந்து
எரிபொருள் வடிவாய் உருமாற்றி
எங்கும் விற்பவர் அயலவர்கள்!

இயற்கை விதைத்த எண்ணெயினை
செயற்கை முறையால் தரம்பிரித்து
வியக்க வைக்கும் விலைவைத்தே
மயக்க வைப்பவர் நம்மவர்கள்!

தினமும் உயர்ந்திடும் எரிபொருளால்
உணவும் பொருளும் விலையேற
கடனில் மூழ்கிடும் நிலைவந்தே
கதறி அழுவதோ பொதுமக்கள்!

ஏற்றுக் கொள்ளாச் சக்திகளால்
மாற்று எரிபொருள் கண்டறிந்த
இராமன் பிள்ளைகள் வளர்ச்சியினை
இராவணன் பிள்ளைகள் தடுக்குதன்றோ?

No comments: