11/06/2018

மத்திமீனும் மரவள்ளியும்



மத்திமீனும் மரவள்ளியும்;
குண்டுச்சோறும் குழாய்ப்புட்டும்;
தேங்காயும் தென்னைங்கள்ளும்;
நேந்திரமும் பலாப்பழமும்

இது மட்டுமா....?!

மம்மூட்டியும் மோகன்லாலும்;
கம்யூனிஸ்டும் காங்கிரசும்;
சண்டைமேளமும் சபரிமலையும்
இன்னும் இன்னும் எத்தனையோ?!

அதுவல்ல.....விடயம்

இராசராச சோழர்கால
சிறப்புமிகு மட்டையரிசி
மலையாளி மக்களிடம்
மகத்துவமாய் இருக்குதன்றோ!

காரியம் செய்துவைக்கும்
சூரிய காந்தி எண்ணையெல்லாம்
தேங்காய் எண்ணையோடு
தோற்றேதான் போனதன்றோ!

மண்ணில் விளைகின்ற
மகத்துவத்தை அறிந்தவராய்
இயற்கை உணவருந்தும்
இவர்களை நாம் வாழ்த்திடுவோம்!

நம்மாழ்வார் சொல்லுகின்ற
நம்மூர் உணவு உண்டு
நோயின்றி வாழ்வதற்கு
நாமும் முயன்றிடுவோம்.....!!!

உணவே மருந்தென்று
உயிர்ப்போடு வாழ்ந்திடுவோம்!

வாழ்க பாரம்பரியம்!
வாழ்க வளமுடன்!

No comments: